education

img

10-ஆம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்: அமைச்சர் 

சென்னை:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்ட படி நடைபெறும் என்று பள்ளி க்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி பட தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  கூறுகையில், பத்தாம்  வகுப்பு பொது த்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும். பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னரே பள்ளிகள்  திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, பெற்றோரை அழைத்துபள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.   மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், பள்ளிப் பாடங்களைக் குறைப்பது குறித்து 16 பேர் கொண்ட உயர்நிலைக் குழு ஆய்வு செய்து வருகிறது என்று  தெரிவித்தார்.

;